Search This Blog

Dec 21, 2013

நான் ஆராதகன், இங்குதான் இருப்பேன் - ஸ்ரீ ருத்ரன்

Wish to share few lines from 1950 Sri Nrusimha Priya



பெரிய திருமொழி முதல் பத்து ஏழாம் திருமொழி

எட்டாம் பாசுரம்:
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த
அங்கோர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம்
காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல்லதர் வேயங்கழைபோய்
தேய்ந்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே

விளக்கம்:
பிரமனும், சிவனும் நாக்கில் தழும்பு தெரிய எம்பெருமானுக்கு தோத்திரம் பண்ணிய இடம், வாகை மரத்தின் கிளைகள் சல சல என்று காற்றின் மிகுதியினால் ஓசை ஏற்படுத்திக்கொண்டும், மூங்கில்கள் வானளவு வளர்ந்ததனால் ஒன்றோடு ஒன்று உரசுவதால் உண்டான நெருப்பினால் ஆகாசம் சிவந்திருக்கப் பெற்ற சிங்கவேள்குன்றம் ஆகும்.

No comments:

Post a Comment